இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் மண்ணுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 80-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

