Skip to content

திருப்பத்தூர் அருகே கஞ்சா விற்பனை… 3 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சித்தேரி பகுதியில் தொடர் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் சித்தேரி பகுதியில் ‌ வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்

அப்போது பாழடைந்த கட்டிடத்தில் மூன்று வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்ததும் மேலும் சிம்மனபுதூர் பகுதியை சேர்ந்த உதயகுமார் (33) மற்றும் சித்தேரி பகுதியைச் சேர்ந்த அமர்நாத் (25) மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த வினோத் (19) என்பதன் தெரியவந்தது. மேலும் இவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் திருப்பத்தூர் கிராமிய போலீசார் மூவரையும் கைது செய்து ‌ திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!