சிக்கிம் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள யங்க்தாங் பகுதியின் அப்பர் ரிம்பி (Upper Rimbi) பகுதியில், கடந்த இரவு நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கனமான மழைக்குப் பின் ஏற்பட்டது. மேலும், 3 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் அறிந்ததும் வந்த காவல்துறை மற்றும் எஸ்எஸ்பி வீரர்கள், உள்ளூர் மக்களுடன் சேர்ந்து உடனடியாக மீட்புப் பணியைத் தொடங்கினர். இருப்பினும், சம்பவ இடத்தை அடைய, ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியிருந்த ஹியூம் நதியைக் கடக்க வேண்டியிருந்தது.
தற்காலிக மரப் பாலம் அமைத்து, வெள்ளத்தில் சிக்கிய 2 பெண்களை மீட்டுள்ளனர். அதன்படி, காவல்துறை மற்றும் எஸ்.எஸ்.பி பணியாளர்கள் உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து இரண்டு பெண்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆனால் அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார், மற்றொரு பெண் ஆபத்தான நிலையில் உள்ளார். பாதிப்படைந்த பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.