Skip to content

6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் இன்று  6 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று  (ஜூலை 24) காலை 05.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  இது அடுத்த 24 மணிநேரத்தில்(இன்று) அழ்ந்த காற்றழுத்த தாழ்வு  பகுதியாக வலுப்பெற்று, பின்னர் மேற்கு – வடமேற்கு திசையில் , மேற்குவங்கம்- வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்று கணிக்ககப்பட்டுள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா – கேரளா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளிலும்  ஒரு காற்றழுத்த தாழ்வு  நிலை நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளது

error: Content is protected !!