Skip to content

கோவில்பட்டி இரட்டைக் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே இரவில் நின்று  கொண்டிருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த 1வது தெருவைச் சேர்ந்த பிரகதீஸ் (27) என்பவரை மர்ம நபர்கள்  அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இக்கொலை நடந்து அரைமணி நேரத்திற்குள் செண்பகா நகர் 3வது தெருவைச் சேர்ந்த கஸ்தூரி (50)என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கஸ்தூரி மற்றும் அவரது சகோதரர் செண்பகராஜ்  ஆகியோரை அறிவாளால்  வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே கஸ்தூரி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செண்பகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பிரகதீஸ் கொலையில் தொடர்புடைய சதீஷ் மாதவன்( 26), செல்லத்துரை (26), விக்னேஷ் (24), மதன்குமார் (20), கனகராஜ் (24), அர்ஜுன் (24), சுரேஷ் (24) ஒரு சிறார் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கஸ்தூரி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
error: Content is protected !!