திருச்சி மத்திய, வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. மாவட்ட திமுக அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி, பண்ணப்பட்டி கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தெற்கு மாவட்ட செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந. தியாகராஜன் எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் க. வைரமணி,எம்எல்ஏக்கள் சௌந்தர பாண்டியன், கதிரவன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார்,முன்னாள் எம்எல்ஏக்கள் பரணிகுமார், பெரியசாமி,
கேஎன்.சேகரன் ஆகியோர் முன்னிலையில் மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன்ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்திற்கு 30 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்த முதலமைச்சர் நிதி வழங்கியுள்ளார் என்று நினைக்கும் பொழுது நமக்கெல்லாம் வியப்பாக இருக்கும்.
நாம் கடந்த தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 100 சதவீதம் வெற்றி பெற்றோம். அதே போன்று வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்று மீண்டும்
மு க ஸ்டாலினை முதலமைச்சராககொண்டு,வர பாடுபட வேண்டும்.
திருச்சிக்கு வருகிற 8, 9 தேதிகளில் வருகை தரும் தமிழக முதலமைச்சருக்குபிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்.கடந்த நான்கு ஆண்டுகளில் முதலமைச்சரின்
நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்து கூற வேண்டும்’ என்றார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சரும்,தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:
முதலமைச்சர்ரை வரவேற்பதில் நம்முடைய கழகத்தில் உள்ள இளைஞர்கள், நடுத்தரப் பட்டவர்கள், மூத்த முன்னோடிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.திருச்சிக்கு வருகை தரும் முதலமைச்சரை மகிழ்ச்சி கடலில் கொண்டு வர நாம் அனைவரும் மக்கள் கடலை திரட்ட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
திருச்சி மாவட்டத்திற்கு வருகின்ற 8 மற்றும் 9 தேதிகளில் வருகை தரும் தமிழக முதல்வர், தி.மு.கழக தலைவர் மு க ஸ்டாலினுக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பதுடன் அவர் கலந்து கொள்ளும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்திலும் பெருந்திரளாக கழகத்தினர் கலந்து கொள்வது.
திருச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைந்திட அனுமதி அளித்தும் நிதி ஒதுக்கியும், அப்பேருந்து நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞரின் பெயரை சூட்டியும் நேரிடையாக வருகை தந்து பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் முதலமைச்சர் அவர்களுக்கும் இத்திட்டம் நிறைவேற உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இக்கூட்டம் தனது நன்றியை தெரிவித்துகொள்கிறது.
‘
தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பொறுப்பிற்கு தமிழக அரசின் பரிந்துரையை ஏற்காமல் நியமனங்களை தாமதப்படுத்திய ஆளுநரின் செயலை கண்டித்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்று இந்தியாவிற்கே வழி காட்டி மாநில சுய ஆட்சிக்குவித்திட்ட திராவிட மாடல் முதல்வர் முக. ஸ்டாலின்க்கு இக்கூட்டம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
திருச்சி மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைந்திட முதலமைச்சர் அவர்களின் அனுமதி பெற்று தமிழகத்திலேயே பெரிய பேருந்து நிலையம், அமைத்திட அனைத்து வழிகளிலும்,அயராது பாடுபட்டு திருச்சி மாவட்டம் பதித்திடும் வகையில் பேருந்து நிலையத்தை உருவாக்கிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு க்கும் உறுதுணையாக இருந்த திருச்சி மாநகராட்சி மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கும் இக்கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்வதுஎன்று திருமண நிறைவேற்றப்பட்டன.
முடிவில் துணைச் செயலாளர் மயில்வாகனன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் துணை மேயர் திவ்யா
மத்திய மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், துரைராஜ், மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டிசேகர்,ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா, அந்த நல்லூர் கதிர்வேல்,
நிர்வாகிகள் ஆனந்தன், கருணாநிதி,ராஜேந்திரன், விஜயா ஜெயராஜ்,பகுதி செயலாளர்கள் கவுன்சிலர் கமால் முஸ்தபா, மோகன்தாஸ், கவுன்சிலர் நாகராஜ்,கவுன்சிலர் காஜாமலை விஜய்,ராம்குமார்,பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம் , புத்தூர் தர்மராஜ்,மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர் சிங்காரம்,வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன் குமார்,மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,ஆண்டாள் ராம்குமார்,முன்னாள் பகுதி செயலாளர் தில்லைநகர் கண்ணன்,மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி,
மாவட்ட பிரதிநிதிகள் வழக்கறிஞர் மணிவண்ண பாரதி,சோழன் சம்பத்,வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ்,பி.ஆர்.பி .பாலசுப்ரமணியன்,
வாமடம் சுரேஷ்,தனசேகர்,கவுன்சிலர்கள் மண்டி சேகர், கவிதா செல்வம், ராமதாஸ், புஷ்பராஜ், மஞ்சுளா பாலசுப்பிரமணியன்,நிர்வாகிகள் அயூப்கான்,சர்ச்சில்,ரஜினி கிங்,
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், மாவட்ட துணை செயலாளர்கள் லீலா வேலு, மூக்கன், செங்குட்டுவன், மாநகர நிர்வாகிகள் சந்திரமோகன், பொன் செல்லையா, பகுதி செயலாளர்கள் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ், பாபு, ஏ.எம்.ஜி.விஜயகுமார், நீலமேகம், சிவக்குமார், ராஜ் முகமது, மோகன், மணிவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் கே.கே.கே. கார்த்திக், வேங்கூர் தனசேகர், கவுன்சிலர்கள் சாதிக் பாட்ஷா, பொற்கொடி, எல்.ஐ.சி சங்கர், சீதாலட்சுமி முருகானந்தம் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.