திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நயனசெருவு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் அருள் பிரகாசம் இவருக்கு கந்கிலி பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுடன் கடந்த 10வருடங்களுக்கு முன்பு திருமணமானது.
இந்த நிலையில் 10 வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது அதற்கு கரன்ஷர்மா எனவும் பெயர் வைத்தனர்.
அருள் பிரகாசம் விவசாயம் செய்து வரும் நிலையில் இந்த நிலத்தின் ஏர் உலுக தனது டிராக்டரை எடுத்துள்ளார் அப்போது தனது ஒன்றை வயது குழந்தை கரண் ஷர்மா டிராக்டரின் பின்புறத்தில் இருப்பதை தெரியாமல் டிராக்டரை எடுத்த போது குழந்தையின் தலையின் மீது
ஏறி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர் இதன் காரணமாக பெற்றோர்கள் மருத்துவமனையில் கத்தி கதறி அழுத்தனர்.
அதனைத் தொடர்ந்து தாத்தாவான முருகன் தனது பேரனை எப்படியாவது காப்பாற்றி விடுவேன் எனக்கூறி செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குழந்தையை கட்டியணைத்தபடி தூக்கிக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே ஓடிவந்த சம்பவம் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது. தவமிருந்த பெற்றெடுத்த குழந்தை தந்தையின் சிறிய கவனக்குறைவால் உயிர் போன சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்