ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன் ஓ.பன்னீர்செல்வத்திடம் பலமுறை பேசினேன். எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினேன். ஓ.பன்னீர்செல்வத்தைப் போலவே டிடிவி. தினகரனிடமும் பேசினேன். ஓ.பன்னீர் செல்வம் வெளியேறியது சொந்தப் பிரச்சினையா அல்லது வேறு காரணமா எனத் தெரியவில்லை. பழனிசாமி அழுத்தத்தின் காரணமாக பன்னீர்செல்வத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை. என்னிடம் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன். பன்னீர்செல்வம் முதல்வரை சந்தித்தது தொகுதி பிரச்சினைக்காக இருக்கலாம் என்றும் கோரினார்.
ஓபிஎஸ் விரும்பினால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு..நயினார் நாகேந்திரன் பேட்டி
- by Authour
