Skip to content

ஆர்பிஎப் கால்பந்தாட்ட போட்டி : திருச்சியில் இன்று தொடங்கியது

தென்னக ரயில்வே ஆர்.பி.எப் அனைத்து கோட்டங்களுக்குமான கால்பந்தாட்ட போட்டி  திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் இன்று தொடங்கியது.  இதில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை,திருவனந்தபுரம், பலக்காடு ஆகிய  6 கோட்டங்களில் உள்ள ஆர்.பி.எப் அணிகள் பங்கேற்கிறார்கள்.

முதலாவது போட்டியை திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர்  பிரசாந்த் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  துவங்கி வைத்தார்.திருச்சி கோட்ட அணியும் , திருவனந்தபுரம் கோட்டம் அணியும் விளையாடிது.  அதில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அணியினர் இரண்டுக்கு ஒன்று  என்ற  கோல் கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றனர். போட்டியில் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.

 

 

error: Content is protected !!