தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல கோவை ரயில் நிலையத்தில் குவிந்த புலம் பெயர் தொழிலாளர்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பணியாற்றும் பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு
செல்கின்றனர். ஒரே நேரத்தில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல குவிந்து வருவதால் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.