புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு அறந்தாங்கி கோட்டாட்சியர் அபிநயா தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் அறந்தாங்கி வட்டாட்சியர் கருப்பையா மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்
விவசாயிகள் அளித்த கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் கூறினார்.
ஆவுடையார்கோவில் பகுதி சார்ந்த குளத்து குடியிருப்பு ஜி எஸ். சுப்பிரமணின் மற்றும்பல விவசாயிகள் தங்களது
பகுதி குறைகளையும் கோரிக்கைகளையும் எடுத்து கூறினர்.

