Skip to content

திராவிடத்தை காப்பாற்ற திமுக பக்கம்..வைத்தியலிங்கம் நெகிழ்ச்சி

ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர முக்கிய ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். இவர் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ. பன்னீர்செல்வத்தின்
அமைப்பிலிருந்து விலகி முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில்

இணைந்தார். இதற்காக வைத்திலிங்கம் தனது ஒரத்தநாடு சட்டமன்ற எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் .

இதையடுத்து தஞ்சை செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்று வரும் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் தனது ஆதரவாளர்கள் 10, 000-க்கும் மேற்பட்டோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டு பந்தல் அருகே இதற்காக தனியாக அமைக்கப்பட்ட மேடைப்பந்தலில் நடைபெற்ற விழாவில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவும் ஆன துரை.சந்திரசேகரன் வரவேற்றார். துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி, முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்தார். அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் முன்னாள் அ மைச்சர் வைத்திலிங்கம் பேசியதாவது: நமது முதலமைச்சர்  இந்தியாவிற்கே வழிகாட்டுகின்ற அளவிற்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மகளீர் உரிமைத் தொகை 1 கோடியே 30 லட்சம் பெண்கள் இன்றைக்கு மனதார வாழ்த்தி கொண்டிருக்கிறார்கள். அதேபோல் புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம், இப்படிப் பல திட்டங்கள் மாணவ-மாணவிகள் வளம் பெற, அவர்கள் வாழ்வு உயர அற்புதமான திட்டங்கள்.

இன்றைக்கு இந்த திராவிடத்தைக் கண்டாலே சிலருக்கு மனவேதனை. யாரும் இந்த திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது என்பதற்கு, இன்றைக்கு நமது முதல்வர் எதற்கும் துணிந்து, ‘என்னுடைய உயிர் திராவிடம்தான்’ என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எப்போதும் நாம் அவருக்குத் துணையாக இந்த திராவிடத்தைக் காக்கப் பாடுபட வேண்டும் என்று கேட்டு, சிபிச் சக்கரவர்த்தி மடியில் விழுந்த புறா போல் இன்றைக்கு அவர் மடியில் நான் விழுந்திருக்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரால் இணைக்கப்பட்ட அனைவரையும் மனதார வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வரும் வழியில் நான் பேச வேண்டிய அவசியமில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த இணைப்பு விழாவில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்த போது பேசவில்லை என்றால் அது சரியாக இருக்காது. அதனால் அனுமதி வாங்கி பேசினேன். இது இணைப்பு விழாவா அல்லது இணைப்பு விழா மாநாடா என்று நினைக்கும் அளவிற்கு பிரமாண்டமாக அமைந்துள்ளது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் வைத்திலிங்கம் பணியாற்றி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பிரிந்தது. சட்டசபையில் கூட வைத்திலிங்கம் கவலையுடன் தான் இருந்தார். இதனை நான் அப்போதே பார்த்தேன். சுய மரியாதை முக்கியம் என உணர்ந்து தற்போது வைத்திலிங்கம் தி.மு.க.வில் லேட்டாக இணைந்துள்ளார். லேட்டாக இணைந்தாலும் லேட்டஸ்டாக இணைந்து விட்டார்.

தேர்தல் நெருங்கி விட்டது. நாம் மிகப்பெரிய வெற்றி பெற போகிறோம். மக்களின் பேராதரவோடு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தான். நமது ஆட்சியில் ஏற்கனவே பல சாதனைகளை படைத்து விட்டோம். இனி அந்த சாதனையை மிஞ்சும் அளவிற்கு மேலும் பல சாதனைகளை படைக்க போகிறோம். தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி ‌.
இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர் கல்வி துறை அமைச்சர் கோவி செழியன், எம்.பி., ச.முரசொலி, தஞ்சாவூர் எம்எல்ஏ. டி.கே.ஜி.நீலமேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!