புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி மீனவரின் நாட்டுப்படகு வலையில் கொடுவாமீன் ஒன்று சிக்கியது. அதன் எடை 7.5 கிலோவாம். அதனை அந்த மீனவர் கிலோ ரூ. 550வீதம் ரூ. 4,100 க்கு மீன் சந்தையில் விற்றுள்ளார். நாட்டுப் படகு மீனவர் வலையில் இவ்வளவு பெரிய மீன் பிடிபடுவது மிக அரிது என கூறப்பட்டது.

