Skip to content

கருப்பண்ணசாமிக்கு அரிவாள் காணிக்கை செலுத்திய அன்புமணி

மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் மற்றும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி கோவிலுக்கு 11 அடி நீள அரிவாளை காணிக்கையாக செலுத்திய அன்புமணி ராமதாஸ், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தங்களது கூட்டணி அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது மனைவி சௌமியா மற்றும் இளைய மகளுடன் ஆன்மீக பயணமாக 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலுக்கு வருகை தந்தார். பெருமாளை தரிசனம் செய்த பின்னர் நூபுர கங்கை

தீர்த்தம் மற்றும் பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அன்புமணி ராமதாஸ், காவல் தெய்வமாக விளங்கக்கூடிய 18-ஆம் படி கருப்பண்ணசாமி கோவிலுக்கு 11 அடி நீளம் அருவாளை காணிக்கையாக செலுத்தி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதத்தை அன்னதானமாக வழங்கிய அன்புமணி தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தங்களுடைய கூட்டணியில் எந்தவித குழப்பமும் சலசலப்பும் இல்லாத காரணத்தால் மக்களின் அமோக ஆதரவோடு 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். திமுக ஆட்சி காலத்தில் குக்கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இளைஞர்களிடம் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களது கூட்டணியில் எந்தவித சலசலப்பும் குழப்பமும் இல்லாத காரணத்தால் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

error: Content is protected !!