இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் பணிக்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்னிபாத் திட்டத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான அக்னி வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியானது. சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், திருப்பத்தூர், தி.மலை , ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர் பணிக்கு விண்ணப்பிக்க ஏப்.1 கடைசி நாள்; ஜூன் மாதம் ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

