Skip to content

ஜனவரி 2ம் தேதி முதல் பொங்கல் வேட்டி, சேலை….. அமைச்சர் காந்தி தகவல்

2024 ம் ஆண்டு பொங்கலுக்கு வழங்கவுள்ள வேட்டி சேலை திட்டத்திற்கு உத்தேச உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்து வழங்கிட தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது . அதன்படி இலவச வேட்டி சேலைக்கான உற்பத்தி அனுமதி மற்றும் முன்பணமாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 14ம் தேதி தமிழக அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது .மேலும் வேட்டி சேலை வழங்கும் நடைமுறையை கண்காணிக்க வருவாய்த் துறை தலைமையில் கூடுதல் தலைமை செயலாளர் , கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், வருவாய்த் துறை மற்றும் கைத்தறி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவினை அமைக்க உத்தரவிடபட்டுள்ளது.

இந்த நிலையில்  வரும் பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை  ஜனவரி 2ம் தேதியே   அனைத்து ரேசன் கடைக்ள மூலம் வழங்கப்படும் என கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!