பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம், அக்டோபர் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ50-ல் இருந்து ரூ.75 ஆகவும், பயோமெட்ரிக் (Biometric) மாற்றம் செய்ய, கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.125 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
புதிய ஆதார் பெற விண்ணப்பிப்போருக்கு கட்டணம் இல்லை. இந்த கட்டண உயர்வு, செப்டம்பர் 30, 2028 வரை அமலில் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் அது நேரடியாக மக்களை பாதிக்கக்கூடும் என்றாலும், உயர்வு மிகக்குறைந்த அளவில் மட்டுமே உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.