சென்னை, பூந்தமல்லி-திருவள்ளூர் வழித்தடத்தில் செல்லும் சென்னை மாநகரப் பேருந்து, கோயம்பேடு மெட்டுக்குளம் சந்திப்பு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்திற்குள்ளானது. பணிமனைக்கு பஸ்சை ஒட்டி வரும்போது டிரைவர் பழனிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஓட்டுநர் பழனியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

