திருச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி :
திருச்சியில் வருகிற மார்ச் 16ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட இடத்தை தேர்வு செய்வது குறித்து இன்று பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் திருச்சி வருகை புரிந்தார்.திருச்சி
பஞ்சபூரில்இடம் தேர்வு செய்த இடத்தை பார்வையிட்டார் பிறகு அவர்
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார அப்போது அவர் கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின் தான் அது குறித்து பேசுவோம்.
எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவை சந்திக்க சென்றுள்ளார். எதற்காக சென்றுள்ளார் என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கும், அமித் ஷாவிற்கும் தான் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

