தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், கிராமப்புற இளைஞர்களுக்கான “வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்க பயிற்சி” வரும் பிப்.10 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் திருச்சி வ.உ.சி சாலையில் உள்ள இயந்திர கலப்பை பணிமனையில் நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

