Skip to content

அமித்ஷாவுக்கு கட்டுப்பட்ட அதிமுகவாக மாறிவிட்டது… அமைச்சர் சிவசங்கர்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பல்வேறு கிராமங்களில் 5 கோடியே 20 இலட்சம் மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகளை துவங்கி வைத்தபின் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளரை சந்தித்தார்.

அப்போது, பாஜக நடத்திய முருகன் மாநாட்டில் பெரியார் அண்ணா உங்களிடம் திராவிட இயக்க தலைவர்களை விமர்சிக்கும்போது அதிமுகவினர் மேடையில் அமர்ந்திருந்தது அவமானகரமான சம்பவம் என் தெரிவித்தார்.

மேலும், அதிமுக என்பது அமித்ஷாவுக்கு கட்டுப்பட்ட அதிமுக மாறிவிட்டது. எப்போதும் திராவிட இயக்கத்தினர்

என்று சொல்லிக் கொள்பவர்கள், நேற்று நடந்த சம்பவத்தை குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. இது ஒரு மிகுந்த அவமானகரமாக சம்பவமாக உள்ளது என்றார்.

எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட மேடையில் எடப்பாடி பழனிச்சாமியை பேச விடாது, அமித்ஷா மட்டும் பேசி கூட்டணியை அறிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் மௌன சாட்சியாக அமர்ந்திருந்தார்.

இது மெல்ல மெல்ல அமித்ஷா திராவிட முன்னேற்ற கழக மாறி வருவதை காட்டுகிறது.

கீழடி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழரின் தொன்மையை, பெருமையை நிலைநாட்டக் கூடாது. அப்படி ஒப்புக்கொண்டால் இந்திய திணிக்க முடியாது. அதே சமயத்தில் மக்களை பிளவுபடுத்தி மத ரீதியாக பிரித்து வட இந்தியாவில் தாங்கள் ஆட்சிக்கு வந்தது போல, இங்கேயும் செயல்பட அவர்கள் எண்ணுகிறார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வு பெற்றவர்கள். பெரியார், அண்ணா திராவிட இயக்க தலைவர்கள் வழியில் வந்த கொள்கைகளை பார்ப்பவர்கள். அவர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்வார்கள் என்று செய்தியாளர்களிடம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்

error: Content is protected !!