முன்னாள் முதலமைச்சர் ஒ.ப்ன்னீர்செல்வம் 5 நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்து கொண்டு விமான முலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களை அவரது ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர் இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.
எங்களின் அடையாளமே அண்ணா தான் கட்சியின் பெயரே அண்ணா திமுக தான். அதில் இருந்து வந்தவர்கள் தானே. இந்த சர்ச்சை தேவையில்லாத ஒன்று. விஜய் கருத்து சொல்லாது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார். மேலும் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பொழுது விமான நிலையத்தில் இருந்த பயணிகள் ஓ பன்னீர்செல்வம் அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.