Skip to content

அரியலூர்.. கோயில் இடத்தில் நீதிமன்றம் கட்டப்படுவதை நிறுத்தக்கோரி கோயிலில் வழிபாடு

  • by Authour
அரியலூா் மாவட்டம், செந்துறையில் கோயில் இடத்தில் நீதிமன்றம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பணிகளை நிறுத்த வலியுறுத்தியும் அக்கோயிலை குலதெய்வமாக கொண்டுள்ள மக்கள், கோயிலில் தீபம் ஏற்றி நூதன முறையில் தங்கள் எதிா்ப்பை தெரிவித்து வழிபாடு நடத்தினா். செந்துறையை அடுத்த உடையான்குடிகாடு கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கரும்பாயிரம் கொண்ட அய்யனாா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் செந்துறையில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நீதிமன்றத்துக்கு புதிய நீதிமன்றம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நீதிமன்ற கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோயில் வளாகத்தில் நீதிமன்றம் கட்டுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி , குலதெய்வ மக்கள் மற்றும் கிராம மக்கள் கோயிலில் தீபம் ஏற்றி நூதன முறையில் தங்கள் எதிா்ப்பை தெரிவித்து வழிபாடு நடத்தினா். தொடா்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனா். இந்த வழிபாடு நிகழ்ச்சிக்கு அகில பாரத இந்து மகாசபா மாநில பொதுச் செயலா் ராமநிரஞ்சன் தலைமை வகித்தாா். இதில், கோயில் குலதெய்வ மக்கள், கிராம மக்கள் பங்கேற்றனா்.
error: Content is protected !!