தொம்பர் இன மக்களுக்கு ரூ.3.60 கோடியில் புதிய வீடுகள் – கரூரில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குப்பம் ஊராட்சியில், தொம்பர் இன மக்களுக்காக ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் பு

திய வீடுகள் கட்டி வழங்கப்பட்டது.
ரூபாய் 3 கோடியே 60 லட்சம் மதிப்பில், 83 புதிய வீடுகள், சமுதாயக் கூடம், சுகாதாரக் கழிப்பிடம், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மற்றும் தார் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன்

அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை, செந்தில் பாலாஜி பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
இந்நிகழ்வில், இளங்கோ, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

