திருவாரூர் , மன்னார்குடி அருகே பிரசவ வலியால் துடித்த சத்தியா என்ற கர்ப்பிணிக்கு மருத்துவ ஊழியரின் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் 108 ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர். தக்க நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்ட டிரைவர் மதியழகன் மற்றும் உதவியாளர் முரளிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

