243 தொகுதிகள் அடங்கிய பீகார் சட்டமன்றத்துக்கு வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இப்போதே தேர்தல் பணிகள் தொடங்கி விட்டன. காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2500 உரிமைத் தொகை வழங்குவோம் என இப்போதே வாக்குறுதி அளித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த திட்டத்துக்கு மை பெஹின் மான் யோஜனா என பெயரிட்டுள்ளனர்.