Skip to content

திருச்சியில் காலிமனைக்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது…

  • by Authour
காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய திருச்சி மாநகராட்சி பொன்மலை 4-வது மண்டல பில் கலெக்டர் செபாஸ்டின் (56) என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர். திருச்சி, கே.கே.நகர், இந்திராகாந்திதெருவைச் சேர்ந்த திரு.சீனிவாசன் என்பவர் திருச்சி கே.கே.நகரில் தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் திருச்சி, கொட்டப்பட்டு கிராமம், அன்பில் நகரில் சுமார் 5920 சதுரடி உள்ள காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டி விண்ணப்பித்ததன் பேரில், காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வார்டு-65க்குரிய பில் கலெக்டர்  செபாஸ்தியானை அணுகியுள்ளார். அப்போது  அவர் லஞ்சமாக ரூ. 12 ஆயிரம் நிர்ணயம் செய்துள்ளார். பின்னர்  ரூ. 10 ஆயிரம் தொகையை குறைத்துக்கொண்டு கேட்டுள்ளார். இதை  தர விரும்பாத சீனிவாசன் நேற்று 11.06.2025ந்தேதி புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சக்திவேல்,  .பிரசன்ன வெஙகடேஷ்,  .பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது பில்கலெக்டர்  செபஸ்தியான் லஞ்சப்பணம் ரூ.10,000/-த்தை சீனிவாசனிடமிருந்து 12.06.2025ந்தேதி அவரது அலுவலகத்தில் வைத்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். மேலும் தி செபஸ்தியானை கைது செய்தனர். பின்னர் சோதனை செய்தபோது அவரிடம் கணக்கில் வராத ரூ.24,000 இருந்தது, சந்தேகத்தின் பேரில் அத்தொகை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக திருச்சி பொன்மலை கோட்ட, கார்ப்பரேசன் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.    
error: Content is protected !!