திருச்சி பாஜக ஶ்ரீரங்கம் தொகுதி சார்பில் நேற்று மாலையில் தேசியக்கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. அம்மா மண்டபத்தில் தொடங்கிய நிகழ்ச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமை வகித்தார். மாநில இணைப் பொருளாளர் சிவசுப்ரமணியன்
தொடங்கி வைத்தார். மாநில மகளிர் அணி நிர்வாகி புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கையில் தேசியக்கொடி ஏந்தி ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் வரை பேரணியாக சென்றனர்.