Skip to content

அழுகிய நிலையில் 4பேரின் உடல்கள் மீட்பு-திருச்சியில் பரபரப்பு

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள கொள்ளிடக்கரையில்
யாத்திரி நிவாஸ் கட்டப்பட்டுள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அறநிலையத்துறை அதிகாரிகள் இதனை பராமரித்து வருகின்றனர்.
தற்போது வைகுண்ட ஏகாதசி விழா வருகிற
30-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் திருவரங்கத்துக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில் கடந்த 10-ந் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் (வயது 67) இவரது மனைவி செண்பகவள்ளி (65). தனது 42 வயது திருமணம் ஆகி விவாகரத்தான மூத்த மகள் பவானி ,37 வயது கண்பார்வையற்ற மகள் ஜீவா ஆகிய
இரண்டு மகள்களுடன் கடந்த 10 – ந் தேதி திருச்சி வந்தார் யாத்திரி நிவா

ஸில் 710 வது அறையை எடுத்து குடும்பத்துடன் தங்கினார். . கடந்த 4 நாட்களாக அறை கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த யாத்திரிநிவாஸ் ஊழியர்கள் இன்று அங்கு சென்று பார்த்த போது துர்நாற்றம் வீசியது.
உடனடியாக இது பற்றி திருவரங்கம் போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக உதவி போலீஸ் கமிஷனர் சீதாராமன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நான்கு பேரும் உடல் அழகிய நிலையில் பிணமாக கிடப்பது கண்டறியப்பட்டது.
. மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது.இளைய மகளுக்கு கண்பார்வை தெரியவில்லை. குடும்ப வறுமை ஒருபுறம் வாட்டி வதைத்தது. உறவினர்கள் யாரும் ஆதரவுக்கு என்று இல்லை. இதனால் வறுமை ஒரு புறமும்,மன உளைச்சல் ஒருபுறமும் இருந்த நிலையில் சீனிவாசன் திருவரங்கம் யாத்திரி நிவாஸில் அறை எடுத்து தங்கி உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்தது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாத்திரிநிவாஸ் அறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரப்பு ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!