Skip to content
Home » பப்ஜி விளையாட்டை புறக்கணித்த சிறுவன்… சைக்கிள் பரிசு அளித்த டிஜிபி…

பப்ஜி விளையாட்டை புறக்கணித்த சிறுவன்… சைக்கிள் பரிசு அளித்த டிஜிபி…

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்மீரா. இவர் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியன் வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கொரானா கால கட்டத்தில் தனது மகன் உவேஷ் அல்தாப் (வயது 13) மற்றும் மகளுக்கு ஆன்லைன் வகுப்பு படிக்க செல்போன் வாங்கி கொடுத்திருக்கிறார். அவர்கள், அந்த செல்போனில் யூடியூப். மூலம் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவின் மோட்டிவேஷனல் பேச்சுகளை பார்த்திருக்கின்றனர். இதுகுறித்து உவேஷ் அல்தாப், தனது தாயாரிடம் கூறுகையில், குழந்தைகள் பப்ஜி கேம் விளையாட கூடாது. அப்படி விளையாடாமல் இருந்தால் சைக்கிள் வாங்கித்தருவேன் என்று ஒரு வீடியோவில் டி.ஜி.பி. குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளான். மேலும் டி.ஜி.பி. சைக்கிள் வாங்கி தருவார் என்று 3 வருடமாக உவேஷ்அல்தாப் காத்திருந்திருந்து உள்ளான்.

இந்நிலையில் கடந்த வாரம் மணிமுத்தாறு ஆய்வுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு வந்திருந்தார். அப்போது அவரை சந்தித்த உவேஷ் அல்தாப், எனக்கு எப்போது சைக்கிள் வாங்கி தருவீர்கள் என்று கேட்டு உள்ளார். இதனை தொடர்ந்து அந்த சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கும் படி அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார். இதை தொடர்ந்து கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் 8-ம் வகுப்பு மாணவனான உவேஷ் அல்தாப்புக்கு சென்னை பெருநகர போலீஸ் இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் சைக்கிள் பரிசளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!