திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் மண்டல வாடி அடுத்த வெள்ளைய கவுண்டனூர் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ஆந்திரா மாநில சுற்றுவட்டார
பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடின. எருது விடும் திருவிழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீராகள் மற்றும் ஊர்பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். எருது விடும் திருவிழாவில் 10 க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர்
அதனை தொடர்ந்து குறைந்த நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொலைவை கடந்து காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் முதல் பரிசாக ஸ்ப்ளெண்டர் பிளஸ் இரு சக்கர வாகனம் என மொத்தம் 50 வரையிலான சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பாதுகாப்பு பணியில் ஜோலார்பேட்டை போலீசார் 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.