தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நாடி முத்து நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி எதிர்ப்புறம் டிரான்ஸ்பார்மர் அருகில் பார்க் செய்யப்பட்டிருந்த கார் இரவு 08-மணிக்கு திடீரென்று தீப்பிடித்து எறிந்தது. பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தவுடன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.