திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறு கருத்து பரப்பி வருவதாக திருச்சி குற்றவியல் கோர்ட்டில் (எண்4) வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல மாதங்களாக திருச்சி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா, சீமான் மீது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தார். அதற்கான காரணங்கள் உள்ளதாகவும் நீதிபதி கூறினார். அத்துடன் ஜூலை 7ம் தேதி வழக்கை தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் சீமான் ஆஜராகவும் உத்தரவிட்டார்.
சீமான் மீது வழக்கு தொடர திருச்சி கோர்ட் உத்தரவு
- by Authour
