Skip to content

ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது

  • by Authour
அதிமுக முன்னாள்  அமைச்சர்  சண்முகநாதன். இவர்  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில்  எம்.எல்.ஏவாக இருந்தவர். இவரது மகன் ராஜா. இவர் தூத்துக்குடி  மாநகராட்சி  அதிமுக கவுன்சிலர்.  ராஜா மீது பல்வேறு   வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தனது சகோதரிக்கு சொந்தமான  300 பவுன் நகைகளை வாங்கி  மோசடி செய்தது உள்பட  ரூ.17 கோடி  வரை மோசடி செய்ததாக இவர் மீது வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ராஜா மலேசியாவுக்கு தப்பி ஓட சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை   மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது  செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
error: Content is protected !!