சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளகண்டனூர் புதுவயல் முஸ்லீம்தெருவைச் சேர்ந்தவர்கள் முகமது (18) , முகம்மது இப்ராஹீம் . இவர்கள் இருவரும் திருமயம் அரசம் பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இவர்கள் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டுபைக்கில் காரைக்குடி யைநோக்கிசென்றபோது திருமயம் தாமரைக்கண்மாய் அருகில்
டாரஸ்லாரி மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள். இதுதொடர்பாகதிருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

