Skip to content

பொள்ளாச்சி அருகே போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கு நல்லி கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜிஷ்னு (21) இவர் வேலாயுதம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் கோழி பண்ணையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் வசித்து வரும் சக்தி சினேகா (22) இவர் பிகாம்.சி.எ படித்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுகளாக2பேரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துமலை முருகன் கோவிலில் திருமணம் செய்துவிட்டு கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில்
கழுத்தில் மாலையுடன் தஞ்சம் அடைந்தனர்.காதலர்கள் இவரிடமும் போலீசார் கேட்டதற்கு எங்களது திருமணத்தை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளோம் என்றனர். அதன் பின்னர் போலீசார் ஜிஷ்னு, செல்வி சினேகா ஆகியோரின் தகவலை பெற்றோர்களுக்கு தெரிவித்தனர். இதனையடுத்து. இருவீட்டார்களும் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாதேவன் இரு குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!