Skip to content

ஆடு மேய்க்க சென்ற தம்பதி மர்ம மரணம்.. போலீஸ் விசாரணை

திருப்பூர் சேனாபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி மர்ம மரணம். வழக்கம்போல் ஆடு மேய்க்க சென்ற தம்பதி காலை உணவு உண்ண வீட்டிற்கு வரவில்லை. உடனடியாக சந்தேகமடைந்த மகன் ஆடு மேய்க்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தம்பதி இருவரும் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியின் மகன் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி இக்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!