திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயிலாங்கபுரம் ஸ்ரீ மகாலட்சுமி நகரை சேர்ந்த செழியன் என்பவரது வீட்டில் கடந்த 24/7/2024 அன்று கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 சவரன் தங்க நகை வெள்ளி கொலுசு 190 கிராம் மற்றும் பணம் 29 ஆயிரம் ஆகியவற்றை
நம்பர் ஒன் டோல்கேட் வாழவந்தபுரம் பகுதியை சேர்ந்த அபிமன்யு மற்றும் உத்தமர் கோவில் பகுதி சேர்ந்த , மணிகண்டன், மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த சாண்டி என்கின்ற சக்திவேல், ஆகிய மூன்று பேரும் திருடி சென்றனர் இச்சம்பவம் தொடர்பாக செழியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞராக பாஸ்கர் ஆஜராகி வாதிட்ட நிலையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முகமது சகாயில் அவர்கள் அபிமன்யுவிற்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை இருபதாயிரம் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்தும் தீர்ப்பு வழங்கினார்.
