Skip to content

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.25.84 லட்சம் கரன்சி பறிமுதல்….

  • by Authour

திருச்சி விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் செல்வதற்காக நேற்று ஸ்கூட் விமானம் தாயார் நிலையில் இருந்தது. இதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு ஆண் பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில், 29,950 யூரோ வெளிநாட்டு பணத்தை கடத்திச் செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பயணியிடம் இருந்து இந்திய மதிப்பிலான ரூ.25.84 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!