கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சேலத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 500 பேர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். அந்த இணைப்பு விழாவில் அதிக நேரம் பேசினேன். அந்த பேச்சில் பல்வேறு பாதிப்புகள் குறித்து பேசினேன். இதில் உண்மைக்கு மாறான செய்திகள் திரித்து கூறி வருகின்றனர். நடிகர் விஜய் அவர்கள் கட்சி தொடங்கிய நிலையில் தமிழனாக நான் வரவேற்றேன். அதே நேரத்தில் கடந்த பத்தாண்டு காலமாக மக்களுக்கும் போராளி இயக்கங்களுடன் சேர்ந்து மக்களின் வாழ்வுரிமை பிரச்சனைக்காக தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் போராடி வருகிறேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என கூறிய போது நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன். நான் விமர்சனங்களை தெரிவித்தேன். ஆனால் விஜய்க்கு எந்த ஒரு விமர்சனமும் தெரிவிக்கவில்லை. அவர் ஒரு தமிழர் மக்களுக்காக அரசியல் செய்யட்டும். ஆனால் நான் எடுத்தவுடன் சட்டமன்றத்துக்கு தான் செல்வேன். உள்ளாட்சித் தேர்தல், நகர சபை தேர்தல் அதன் பிறகு சட்டசபை தேர்தல் பத்தாண்டு காலம் மண்ணுக்கும் மக்களுக்கும் போராடட்டும், அதன் பிறகு எனக்கு வாக்களியுங்கள் என கேளுங்கள். திரைத்துறையில் நடிப்பு முடித்துவிட்டு பல கோடி சம்பாதித்துவிட்டு தற்போது அரசியலுக்கு வருவேன் என கூறி செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு தான் போவேன் கூறியதற்கு விமர்சனம் செய்தேன்.
பெண்கள் சினிமா கதாநாயகர்களை தங்களது அநாகரிகமான செயலில் ஈடுபடுவது தான் ஏற்புடையது இல்லை. நடிகரின் நடிப்புத் திறனை ரசியுங்கள் என கூறினேன். தமிழர்களுக்கு ஒரு அடையாளம் இருக்கின்றது என அடிப்படை கருத்து கூறினேன். வாழும் காமராஜர் என்றும் வருங்கால காமராஜர் என்றும் ஒப்பிட்டு பேசியதற்கு பதில் சொல்வது போல் காமராஜர் எவ்வளவு பெரிய மாபெரும் தலைவர் சமீபத்தில் வந்த விஜயை எப்படி ஒப்பிட்டு பேசுவீர்கள் என கூறினேன். திரைத்துறையில் வசனம் பேசுவதும் அதே மூலதனமாகக் கொண்டு தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரம் வர துடிப்பது ஏற்படையது அல்ல. மக்களுக்காக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இருந்து வருகின்றனர். தமிழக மக்களாகிய நீங்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். தமிழகத்தில் சினிமா மோகம் ஆட்டிபடுத்தி உள்ளது. மக்கள் கலையை கலையாக பார்க்க வேண்டும், நடிகரை நடிகராக பார்க்க வேண்டும், அவர்களது நடிப்பை பாராட்ட வேண்டும். அதனை விட்டுவிட்டு பாலபிஷேகம் செய்வதும் கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வது இதுபோன்ற மோசமான பண்பாட்டு சிதைவுகளை செய்ய வேண்டாம். இது தமிழ் சமுதாயத்தின் கலாச்சார எதிரானதாகும் .
நான் 40 ஆண்டு காலமாக மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள் செய்து வருகின்றேன். அதற்காக எனது கட்சியின் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் எடுத்துக் கூறினேன். உங்கள் பெற்றோர்களை மதித்து பாலபிஷேகம் செய்து உள்ளீர்களா? ஆனால் நடிகர்களுக்கு எதுக்கு பாலாபிஷேகம் செய்கிறீர்கள்? என கேட்டேன். இதில் ஒரு சில பெண்கள் கணவரை வைத்துக்கொண்டு ஒரு சில நடிகரை நேரில் பார்த்தாலோ அவரிடம் ஒரு முத்தம் கொடுத்தாலே போதும் என கூறி வருவதை கண்டித்து பேசினேன். எனது முழு கருத்தை கேட்காமல் எங்களது தளபதி பற்றி பேசி விட்டாய் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர். நான் நாகரித்துடன் சொல்கின்றேன். எனது பயணம் ஒன்றிய அரசு, பயங்கரவாத அரசியலை எதிர்த்து நான் கட்சியை தொடங்கி உள்ளேன்.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறாக பேசுவது நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த மண்ணையும் மக்களையும் 40 ஆண்டு காலமாக நேசித்து பல்வேறு இன்னல்களை சந்தித்து யாராக இருந்தாலும் எதிர்த்து வருகின்றேன். விஜய் எங்கேயாவது இளம் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து உள்ளார் என நான் பேசி உள்ளேனா? நீங்கள் எதற்காக நான் சொன்னேன் என எடுத்துக் கொள்கிறீர்கள் என புரியவில்லை. கணவன் முன்பு இளம்பெண்கள் நடிகர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர். ஏதோ இன்றைக்கு தான் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் மக்களுக்கான போராட்டம் தான் நான் செய்து கொண்டு வருகின்றேன். ஆகையால் அவரது ரசிகர்களை நடிகர் விஜய் பேச அனுமதிக்க கூடாது. நான் அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பேசுகிறேன். இதற்கு எதிர்ப்பு இருந்தால் வேல்முருகன் இப்படி அவதூறாக பேசுவது தவறான கருத்து பேசி வருகிறார் என பத்திரிகையாளர்களை சந்தித்து கூறுங்கள். ஆனால் அதனை விட்டுவிட்டு வீடியோ, சமூக வலைத்தளங்களில் தேவையற்ற பேச்சுகள் வருவது விஜய்க்கு அழகல்ல. இதனை உடனடியாக விஜய் தடுத்து நிறுத்த வேண்டும். நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சமூகத்தலங்களில் பேசி வருவது சரியல்ல என விஜய்க்கு தெரிவித்துக் கொள்கின்றேன்” எனக் கூறினார்.