Skip to content

திமுக ஆட்சிக்கு பின் மண்ணும் செழித்துள்ளது- மக்களும் செழித்துள்ளனர்…. முதல்வர் ஸ்டாலின்…

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாது…  விழாவினை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வேளான் துறை வளர்ச்சி மக்களின் வாழ்வோடும், உயிரோடும் தொடர்புடையது. ஒருநாட்டின் செழிப்பின் அளவுகோல் வேளாண் துறை.

திமுக ஆட்சியில் வேளாண்மை துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து தனி பட்ஜெட் போடப்படுகிறது. வேளாண் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மண்ணும் செழித்துள்ளது, மக்களும் செழித்துள்ளனர். வேளாண்துறையில் பல்வேறு புதிய திட்டங்களை நாம் தொடங்கி உள்ளோம். வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம் உள்ளது. புதிதாக 10 உழவர் சந்தைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திமுக அரசு வேளாண் புரட்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வேளாண் துறையில் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். மத்திய அரசு உழவர்களுக்கு விரோதமாகவே எப்போதும் செயல்பட்டு வருகிறது. 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து உழவர்களை போராட வைத்தது ஒன்றிய பாஜக அரசு இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!