Skip to content

3 பேருக்கு இடமில்லை…. எடப்பாடி அதிரடி பேட்டி

  • by Authour

மதுரை திருமங்கலத்தில் திருமண விழாவை முடித்து விட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒரு சிலரை(ஓபிஎஸ், சசிகலா, தினகரன்)த்தவிர மற்ற வர்கள் அதிமுகவுக்கு வரலாம்.

சுப்ரீம் கோர்ட்டு அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் மூலம் தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது. சட்டப்போராட்டம் மூலம் அதிமுகவுக்கு முழு வெற்றி கிடைத்துள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற அற்புதமான திர்ப்பு கிடைத்துள்ளது. டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி போய்விட்டார்; இரட்டை இலை சின்னம் குறித்து பேச அவருக்கு தகுதி இல்லை. இனி அதிமுகவுக்கும் ஓ.பி.எஸ்-க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. ஆட்சி நீடிக்குமா? என்ற கணிப்புகளை பொய்யாக்கி 4 ஆண்டு 2 மாதங்கள் பொற்கால ஆட்சி கொடுத்தேன். சுப்ரீம் கோர்ட்டு தீர்பால் எழுச்சியுடன் அதிமுக தனது கட்சி பணிகளை ஆற்றும்.

சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டதால் அதிமுக தலைமை குறித்து இனி கேள்வியே இல்லை. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் பொதுச்செயலாளராக இருப்பேன். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களும் செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு உதவும். ஒரு சிலரைத் தவிர யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம். அதிமுக நிர்வாகிகள் கூடி விரைவில் பொதுச்செயலாளர் தேர்வு நடக்கும்.ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் எண்ணம் நிறைவேறியுள்ளது .

ஈரோட்டில் திமுக கூட்டணிக்கு பயம் வந்து விட்டதால் தான் வாக்காளர்களை அடைத்து வைத்து உள்ளனர். இதுவே எங்களுக்கு வெற்றி.  அதிமுக உடைந்து விட்டது என்றார்கள். இப்போது ஒன்றாகி விட்டது. இனி எழுச்சியோடு கட்சி பணி ஆற்றுவோம். ஈரோடு தேர்தலில் வெற்றி பெற இந்த தீர்ப்பு உதவும்.

இனி எல்லோரும் இங்கு வந்து விடுவார்கள். நேற்று கூட ஈரோடு மாவட்ட செயலாளர் எங்களிடம் வந்து விட்டார். மீண்டும் மக்களுக்கு ஒரு நல்லாட்சி  அதிமுக தரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!