தஞ்சாவூர் பழைய ஆதி மாரியம்மன் கோவில் பகுதியில் தண்டவாளம் அருகே ஒரு முதியவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக தஞ்சாவூர் இருப்புப்பாதை ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன் , ராமநாதன், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ், தலைமை காவலர் கவுசல்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதையடுத்து முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா சிவன் கோவில் தெருவை சேர்ந்த அய்யாகுட்டி (வயது 75) என்பது தெரியவந்தது. தொடர்ந்து தண்டவாளத்தைக் கடக்க முயலும் போது ரயிலில் அடிபட்டு அய்யாகுட்டி இறந்தாரா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டவாளம் அருகே முதியவர் படுங்காயங்களுடன் சடலமாக மீட்பு.. தஞ்சையில் பரிதாபம்…
- by Authour
