Skip to content

மக்களுக்கு உதவும் ஒரே இயக்கம் திமுக- நலத்திட்ட உதவி வழங்கி VSB பேச்சு

கரூர் மாவட்ட திமுக சார்பில் கரூர் கொங்கு திருமண மண்டபத்தில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.  முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான  செந்தில் பாலாஜி  608 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 60 லட்சம் மதிப்பிலான கல்வி நிதி உதவிகள் மற்றும் மருத்துவ நிதி உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:
தமிழக முதலமைச்சர் அவர்களின் நல்லாசியோடு சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் தமிழ்நாட்டில் இருக்கலாம் மக்களுக்கு உதவுகின்ற ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர்  அவர்கள் தான்.

எந்த அரசியல் கட்சி அலுவலகத்திற்கு சென்றாலும் கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவி தொகை வேண்டுமென்றாலும் சென்று கேட்டாலும் தீர்வு காணப்படும் நிலை இல்லை .

ஆனால் கரூர் மாவட்ட சட்டமன்ற அலுவலகத்தில் மனுக்களுக்கு நூறு சதவீத தீர்வு காணும்  இயக்கம் திராவிட கழகம் என்பதை  நினைத்துப் பார்க்க வேண்டும் .நமது முதலமைச்சர் நமக்கான நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இதற்கு முன்பாக ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் இதே மாவட்டத்தில் இன்று இருக்கக்கூடியவர்கள் அன்று ஆளுங்கட்சியாக அதிமுக ஆட்சியில் இருந்த போது கொரோனா காலத்தில் பல மாதங்களாக சட்டமன்ற அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் அலுவலகம் 24 மணி நேரமும் செயல்பட்டது.

கரூர் மாவட்ட திமுக அலுவலகம் 24 மணி நேரமும் செயல்பட்டது

நமது முதலமைச்சர் தளபதி என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் அதேபோல இன்று எதிர்க்கட்சியாக செயல்பட கூடியவர்கள் அன்றைய ஆளுங்கட்ச்சியாக இருந்தவர்கள் ஆளுங்கட்ச்சியாக இருந்தபோதும் சரி தற்பொழுது எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் சரி யாருக்கும் எவருக்கும் ஒரு ரூபாய் கூட உதவித்தொகை வழங்கியது இல்லை. அது அவர்களுடைய வரலாறு ,ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி ,கல்வி, மருத்துவம் போன்ற காரியங்களுக்கு  உதவி செய்யும் இயக்கமாக திராவிட முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது .

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!