அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 623.41 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 864 மெ.டன் யூரியா, 746 மெ.டன் டி.ஏ.பி 616 மெ.டன் பொட்டாஷ்; மற்றும்; 1754 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது. இதுவரை

சான்று பெற்ற நெல் விதைகள்; வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் மூலம் 126 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 170 மெ.டன் என கூடுதலாக 296 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 154 மெ.டன்; நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது.
நெல் விதைகள் விதை கிராம திட்டத்தில் ஒரு கிலோ ரூ.17.50 வழங்கப்படுகிறது. மேலும் நெல் நுண்சத்து, உயிர் உரங்கள், சூடோமோனாஸ், ட்ரைக்கோடெர்மா போன்ற உயிரியல் காரணிகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வேளாண் அடுக்குத் திட்டம்: தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெரும் வகையில் வேளாண்மைத்துறையில் வேளாண்மை அடுக்குத் திட்டம் உருவாக்கப்பட்டள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்கள் ஆகியவை கிரைன்ஸ் என்ற இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. கிரைன்ஸ் வலைதளத்தின் மூலம் அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதிபடுத்திட முடியும்.
இது ஒற்றை சாலர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் 13 துறைசார்ந்த திட்டங்களுக்கும், ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். எனவே பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக உரிய ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர்களை ஆகியோர்களை அணுகி பயன்பெறலாம்.
மேலும் விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட ஆட்சியரின் நிதியிலிருந்து அரியலூர்; மாவட்டத்திற்கு நேரடி நெல் விதைப்பு செய்ய நேரடி நெல் விதைப்பு உருளை கருவி வேளாண்மைத்துறைக்கு 3 எண்கள் வழங்கப்பட்டுள்ளது. நேரடி நெல் விதைப்பு செய்வதன் மூலம் சரியான பயிர் எண்ணிக்கை பராமரித்து பயிர் சாகுபடி செலவினை குறைத்து அதிக மகசூல் பெறலாம். மேலும் நேரடி விதைப்பு செய்வதன் மூலம் நெல் வயலில் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக இருக்கும். எனவே, நெல் விதைப்பு உருளை கருவியின் மூலம் விதைப்பு செய்ய உள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக நேரடி நெல் விதைப்பு உருளை கருவி அரியலூர், தா.பழூர் மற்றும் திருமானூர் ஆகிய வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை விவசாயிகள் அணுகி முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம். மேலும், இதற்கு வாடகை எதுவும் இல்லை என்பதனால் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பா.சுரேஷ், மாவட்ட நிலை அலுவலர்கள், இதர அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

