Skip to content

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேலுக்கு பளார் விட்டாரா அவரது மனைவி?

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கடந்த 5 தினங்களுக் முன்  வியட்நாம் வந்தார். அரசு முறை  பயணமான இந்த  இந்த பயணத்தில்  அவரது மனைவி பிரிஜிட்டும் உடன் வந்தார்.  விமானம்  வியட்நாமில் தரையிறங்கியதும்,  இம்மானுவேலும், அவரது மனைவியும் கீழே இறங்க முற்பட்டபோது,  இம்மானுவேலின் கன்னத்தில்  பிரிஜிட் ஓங்கி   பளார் என அறை விட்டதாக   கூறப்படுகிறது. இது தொடர்பாக  ஒரு வீடியோவும் வெளியானது. இதற்கிடையே  இம்மானுவேலுக்கு பளார் விழுந்ததாகவும், இதை பார்த்த விமானியே அதிர்ந்து போய் விட்டதாகவும்   செய்திகள் வெளியானது.

உண்மையில் என்ன நடந்தது என்பது அவர்கள் இருவருக்கு மட்டும் தான் தெரியும். இதுபற்றி இம்மானுவேலோ,  பிரிஜிட்டோ இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.  படிகளில் இறங்கி வரும்போது இருவரும்  எதுவும் நடக்காதது போலத்தான் வந்தார்கள்.

மகாராஜன் உலகை ஆளுவார்.  மகாராணி அவரை ஆளுவார் என்ற பாடல் வரிகள் உண்மை தான்  போலிருக்கிறது. 

error: Content is protected !!