தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே .வாசன் 61-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி. கே.வாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து 300-பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி நாட்ராயன் தலைமையில், கரூர் மாவட்ட தலைவர் திருமூர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதேபோல் அரவக்குறிச்சி மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

