Skip to content

பாலியல் வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி- அரசு வழக்கறிஞர்

அண்ணா பல்கலைக்கழக மாணவி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்  இன்று  சென்னை மகளிர் சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது. அதன்படி ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  தண்டனை குறைப்பு இல்லாமல் இந்த தண்டனையை அவர் அனுபவிக்கும்படி தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில்  அரசு தரப்பில் ஆஜரான   வழக்கறிஞர்  மேரி ஜெயந்தி கூறியதாவது:

இந்த வழக்கில்  சிறப்பாக புலன் விசாரணை செய்யப்பட்டது  பாராட்டுக்குரியது.  ஆவணங்கள் மூலமும், அறிவியல் பூர்வமாகவும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது.  இதில் முக்கிய  ஆவணம்  ஞானசேகரனின் செல்போன் தான்.   சம்பவத்தன்று ஞானசேகரனின் செல்போன்  6.29ல்  இருந்து பிளைட் மோடில் தான் இருந்து உள்ளது.  அதன்பிறகு  இரவு 8 மணிக்கு தான் மிஸ்டு கால் வந்து உள்ளது. ஞானசேகரன் போனில் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை.

ஞானசேகரனின் போனை கைப்பற்றி அதனை  பரிசோதனைக்கு அனுப்பி  பகுப்பாய்வு செய்தோம். அத்துடன் அவர் பயன்படுத்தியது ஏர் டெல் சிம்.  எனவே அவர்  பயன்படுத்திய ஏர்டெல் நிறுவன  மண்டல அதிகாரியையும் கோர்ட்டுக்கு  அழைத்து விசாரிக்கப்பட்டார்.  அவரும் அந்த அந்த போனின்  நிலவரத்தை ஆய்வு செய்து  அந்த போனில் யாரும் பேசவில்லை என்பதை உறுதி செய்தார். ஆனால் அவர்  தான் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் என்பது போல மாணவியிடம் நாடகமாடி அவரை மிரட்ட இன்னொருவருடன் பேசுவது போல நாடகமாடியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணும்  ஒரு நபர் தான் என்பதை உறுதி செய்து உள்ளார். இன்னொரு நபர்  இதில் சம்பந்தப்படவில்லை.  இன்னொரு நபர் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என கோர்ட் கருதினாலும் கோர்ட்டே அந்த நபரை அழைத்து விசாரித்திருக்கும். அதற்கான அதிகாரம் கோர்ட்டுக்கு இல்லை.

எனவே இந்த வழக்கில் இன்னொரு நபர் சம்பந்தப்பட்டுள்ளார் என்றால் அது கோர்ட் அவமதிப்பு ஆகும். இதுபோன்ற  வழக்குகளில் பெண்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் துணிந்து புகார் கொடுக்க முன்வரவேண்டும்.  புகார் கொடுத்தால் தான்  நடவடிக்கை எடுக்கமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!