Skip to content

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வு…

தமிழகத்தில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 6,110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 6,135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 200 ரூபாய் உயர்ந்து 49 ஆயிரத்து 080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே போல் வெள்ளியின் விலையும் கிராமிற்கு கிடுகிடுவென உயர்வை சந்தித்துள்ளது. நேற்று 78 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று ஒரு ரூபாய் 50 பைசா உயர்ந்து, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருவது, தங்கம் வாங்குவோரிடையே மட்டுமின்றி தங்கத்தை விற்பனை செய்யும் நகைக்கடை உரிமையாளர்களிடமும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!