கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்கள், மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து வருவது தொடர்பாக முதல்வரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்:
ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்த்ததுதான். நீதிமன்றத்துக்கு சென்றுவிடுவோம் என்ற அச்சத்தில் ஆளுநர், மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என முதல்வர் கூறினார்.